Sunday 27 March 2022

மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமா? முதலில் இதை செய்யுங்கள் !

மகிழ்ச்சியுடன் வாழும் வழி ! *மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வோம்...!* உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி யைத்தான் விரும்புகிறார்கள் விரும்புவார்கள் துன்பத்தை எவரும் விரும்புவதில்லை.. தீதும் நன்றும் பிறர்தர வாரா ! என்பது முன்னோர்கள் கண்ட உண்மை.. மகிழ்ச்சியும் துன்பமும் தானாக வருவதில்லை. அவரவர்கள் செய்யும் செயகையினால் தான் நன்மை தீமை உண்டாகின்றது. எல்லாவற்றிலும் பெரிய துன்பம் மரணம் மட்டுமே ! எல்லாத் துன்பங்களிலும் மிகப்பெரிய துன்பம் மரணம் என்பது உலகமே அறிந்துள்ள விஷயம்.. மரணம் என்பது பெரியபிணி என்கிறார் வள்ளலார்.. உடற்பிணியால் தான் உயிர்ப்பிணி வருகின்றது..உயிர்ப்பிணியால் ஆன்மாவானது உயிரையும் உடம்பையும் விட்டு வெளியே சென்று விடுகின்றது.. அதற்குப் பெயர் தான் மரணம் என்று பெயர் வைத்துள்ளார்கள். மரணத்தை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...! உலகியல் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. வறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. மேலும் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் துன்பம் வருகின்ற போது தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.. உடல் மெலிந்தும் முதுமை அடைந்தும்.செயல் இழந்தும்.நோய்வாய்ப்பட்டும். நோய்வராமலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறது.. இவைகள் எல்லாமே மரணத்திற்கு பின் துன்பம் தீர்ந்துவிடும் என்பது அறியாமையாகும்.மேலும்.தற்கொலை செய்து கொண்டாலோ தீர்ந்து விடும் என்பது அறியாமையிலும் அறியாமையாகும். எந்த வகையில் மரணம் அடைந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அறியாமல் செய்யும் தவறுகள் ஆகும்.. மனிதர்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்வதற்குத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. உடற்பிணி உயிர்பிணி .இந்த இரண்டு பிணிகளுமே பெயரே காரண காரியமாக உள்ளன. மரணத்திற்கும் இதுவே காரண காரியமாக உள்ளன. உடற்பிணியால் தான் உயிர்பிணி வருகின்றன. உடற்பிணி வரும்போது.அந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிர் பிரிந்து விடுகின்றது... பெயரே காரணம் ! மக்கள் மரணம் அடைவதற்கு காரணமே துன்பம் தான் என்பதை நாம் ஒவ்வொரு மனித ஜீவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.. உடம்பையும் உயிரையும் காப்பாற்றத் தெரியாமல் மனிதர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள். உலகில் தோன்றிய ஞானிகள் என்னும் அருளாளர்களும் மரணத்தை வெல்லும் வழியை சரியாக முறையாக தெரிந்து கொள்ளவில்லை.கற்றுக் கொள்ளவில்லை..ஆதலால் அருள் கிடைத்தும் அருள் பூரணம் அடையாமல் .கிடைக்காமல் மரணம் வந்து மாண்டு போகிறார்கள். *பெயரால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*. அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய அறிவியல் வல்லுனர்களும்.அணு ஆராய்ச்சி யாளர்களும்.அளவில் அடங்கா விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களும் இறைவனால் படைக்கப்பட்ட அணுக்களைக் கொண்டு நிறைய அணு ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்து அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறார்கள்.. இருந்தாலும் மனிதன் மரணத்தை வெல்லும் வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை... மனித உடம்பின் அணு சேர்கையை அழிக்காமல் பிரித்து எடுக்கும் உளவை எவரும் கண்டுபிடிக்கவில்லை. மரணத்தில் ஒன்று இயற்கையான மரணம் ,மற்றொன்று எதிபாராத விபத்தினால் மரணம் .இரண்டுக்கும் பெயரே காரணம் என ஏற்கனவே கூறியுள்ளேன் .மகிழ்ச்சி யாக வாழ ஒரே வழி பெயரை சரியாக வைத்துகொள்வது மட்டுமே.

No comments:

Post a Comment