Friday 5 May 2017

விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate


விதியை மதியால் வெல்லலாம் Change Your Fate
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467
                                            
எண் கணிதம் Numerology என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு.  சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக  பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும்.
எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. 
எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்"  மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம்.

"விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம்.


உள்ளத்தால் உயர்வோம்!
அல்லதை விடுவோம்!!
எண்கணிதத்தால் வளர்வோம்!!!
வாழ்க வளமுடன்!!!
 இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க:






No comments:

Post a Comment