கர்ம பலன்கள் (Benefits of Karma)
கர்ம பலன்கள்:( Benefits of Karma) கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம் , ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா , அம்மா , தாத்தா , பாட்டனார் , முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை , நேரத்தை , நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும். உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும். அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை , வெற்றி , தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து , அவர்களிடம் கற்று , பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் ம...